என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அவதூறு வழக்கு: குஜராத் கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜரானார்
சூரத்:
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் கோலாரில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசும் போது, மோடியை விமர்சனம் செய்தார்.
நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திரமோடி என எப்படி எல்லோரும் பொதுவான குடும்பப் பெயரில் வருகின்றனர்? அனைத்து திருடர்களும் மோடியை பொதுவான குடும்பப் பெயராக கொண்டு இருப்பது எப்படி? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதையடுத்து ராகுல் காந்தியின் மீது குஜராத்தின் சூரத்தை சேர்ந்த பர்னேஷ் மோடி எம்.எல்.ஏ. சூரத்தில் உள்ள மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ராகுல்காந்தி, ஒட்டுமொத்த மோடி சமூகத்தினரையே இழிவுபடுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கில் தனது இறுதி வாக்குமூலத்தை சமர்ப்பிப்பதற்காக ராகுல்காந்தி இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தவே உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி இன்று ராகுல்காந்தி சூரத் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஆஜரானார். அவர் சுமார் காலை 10.30 மணிக்கு கோர்ட்டுக்கு வந்தார். ராகுல்காந்தி, நீதிபதி முன்பு ஆஜரான பின்பு விசாரணை தொடங்கியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்