என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாராயம் வாங்குவதற்காக 2 வயது மகளை விற்ற தந்தை
Byமாலை மலர்14 Jun 2021 12:13 PM GMT (Updated: 14 Jun 2021 12:13 PM GMT)
சாராயம் குடிப்பதற்கு பணம் இல்லாததால் தனது 2 வயது மகளை குழந்தை இல்லாத ஒரு தம்பதியிடம் ரூ.5 ஆயிரத்துக்கு விற்று உள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் ஜெய்பூர் மாவட்டம், கேந்திர பிரதாப் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ரமேசுக்கு குடிப்பழக்கம் உண்டு. சாராயம் குடிப்பதற்கு பணம் இல்லாததால் அவர் தனது 2 வயது மகளை குழந்தை இல்லாத ஒரு தம்பதியிடம் ரூ.5 ஆயிரத்துக்கு விற்று உள்ளார்.
குழந்தையை விற்ற பணத்தில் அவர் சாராயம் வாங்கி குடித்துள்ளார். இதற்கிடையே குழந்தையை காணாமல் அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர். அப்போதுதான் குழந்தை இல்லாத தம்பதியிடம் அந்த குழந்தை இருப்பது தெரிய வந்தது.
2 வயது மகளை தனது தந்தையே சாராயம் குடிப்பதற்காக விற்ற தகவல் அறிந்ததும் குடும்பத்தினரும், உறவினரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X