search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,204 பேருக்கு கொரோனா பாதிப்பு

    கொரோனா தாக்குதலுக்கு இன்று 156 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 437 ஆக அதிகரித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா பரவல் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, கேரளாவில் இன்று 16 ஆயிரத்து 204 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 064 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 20 ஆயிரத்து 237 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 24 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பரிசோதனை


    கொரோனா தாக்குதலுக்கு இன்று 156 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 437 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 022 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×