என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப், உத்தரகாண்டில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு
Byமாலை மலர்7 Jun 2021 7:58 PM GMT (Updated: 7 Jun 2021 7:58 PM GMT)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.
சண்டிகர்:
நாட்டில் கொரோனா-வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகம் தணிந்து வந்தாலும், முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் அதுதொடர்பான ஊரடங்கை மாநில அரசுகள் நீட்டித்து வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், கடைகளை மாலை 6 மணி வரை திறந்திருக்க அனுமதிப்பது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்தார்.
சனிக்கிழமை உள்ளிட்ட வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போதைய ஊரடங்கு இன்று (ஜூன் 8-ந் தேதி) காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், அம்மாநிலத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X