என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு
Byமாலை மலர்28 May 2021 6:16 PM GMT (Updated: 28 May 2021 6:16 PM GMT)
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,87,342 ஆக உள்ளது
சிம்லா:
கொரோனாவின் இரண்டாவது அலை அச்சுறுத்தல் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு தான் தீர்வு என்று மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கை கொண்டு வந்துள்ளனர். இதுவரை 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இமாச்சல பிரதேசத்திலும் மே 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரம் அதாவது ஜூன் 7-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கில் சிறிய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்துக் கடைகளும் மே 31 முதல் வாரத்தில் 5 நாட்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும். அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் 30 சதவீதம் வருகையுடன் செயல்படும். கல்வி நிறுவனம் ஜூன் 5 வரை மூடப்படும். மேலும் பொது போக்குவரத்தும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை அச்சுறுத்தல் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு தான் தீர்வு என்று மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கை கொண்டு வந்துள்ளனர். இதுவரை 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இமாச்சல பிரதேசத்திலும் மே 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரம் அதாவது ஜூன் 7-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கில் சிறிய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்துக் கடைகளும் மே 31 முதல் வாரத்தில் 5 நாட்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும். அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் 30 சதவீதம் வருகையுடன் செயல்படும். கல்வி நிறுவனம் ஜூன் 5 வரை மூடப்படும். மேலும் பொது போக்குவரத்தும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X