என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்த ஆண்டு விமான பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும்
Byமாலை மலர்24 May 2021 10:16 PM GMT (Updated: 24 May 2021 10:16 PM GMT)
கொரோனா 2-வது அலையின் காரணமாக, பல மாநில அரசுகள் புதிதாக கட்டுப்பாடுகளை விதித்தன. அதனால் மறுபடியும் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு கொரோனா தொற்று தாக்கத்தின் தொடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு விமான சேவை, மீண்டும் மே 25-ந் தேதி தொடங்கியது. அதன் பிறகு சீராக அதிகரித்து வந்த உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரியில் முந்தைய ஆண்டின் 64 சதவீத அளவை எட்டியது. ஆனால் கொரோனா 2-வது அலையின் காரணமாக, பல மாநில அரசுகள் புதிதாக கட்டுப்பாடுகளை விதித்தன. அதனால் மறுபடியும் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது. இந்த மாதத்தின் 1 முதல் 16-ந் தேதியை முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 56 சதவீத குறைவு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், முதலீட்டு தகவல் மற்றும் கடன் தரநிர்ணய முகமையான ‘இக்ரா’, நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டுகளில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை மேலும் சரியும், வருகிற 2023-ம் நிதியாண்டுக்கு முன்பு அது கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று கணித்துள்ளது.
‘உள்நாட்டில் விமான பயணிகள் எண்ணிக்கை மீண்டும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை 2023-ம் நிதியாண்டிலும், சர்வதேச விமான பயணிகள் எண்ணிக்கை 2024-ம் நிதியாண்டிலும் எட்டும் என்று கருதுகிறோம்’ எனவும் ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று தாக்கத்தின் தொடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு விமான சேவை, மீண்டும் மே 25-ந் தேதி தொடங்கியது. அதன் பிறகு சீராக அதிகரித்து வந்த உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரியில் முந்தைய ஆண்டின் 64 சதவீத அளவை எட்டியது. ஆனால் கொரோனா 2-வது அலையின் காரணமாக, பல மாநில அரசுகள் புதிதாக கட்டுப்பாடுகளை விதித்தன. அதனால் மறுபடியும் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது. இந்த மாதத்தின் 1 முதல் 16-ந் தேதியை முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 56 சதவீத குறைவு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், முதலீட்டு தகவல் மற்றும் கடன் தரநிர்ணய முகமையான ‘இக்ரா’, நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டுகளில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை மேலும் சரியும், வருகிற 2023-ம் நிதியாண்டுக்கு முன்பு அது கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று கணித்துள்ளது.
‘உள்நாட்டில் விமான பயணிகள் எண்ணிக்கை மீண்டும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை 2023-ம் நிதியாண்டிலும், சர்வதேச விமான பயணிகள் எண்ணிக்கை 2024-ம் நிதியாண்டிலும் எட்டும் என்று கருதுகிறோம்’ எனவும் ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X