என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய மந்திரியின் மகள் கொரோனாவுக்கு பலி
Byமாலை மலர்3 May 2021 8:08 PM GMT (Updated: 3 May 2021 8:08 PM GMT)
யோகிதா சோலங்கி மறைவுக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பா.ஜனதாவினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இந்தூர்:
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியான தாவர்சந்த் கெலாட்டின் மகள், யோகிதா சோலங்கி (வயது 42). கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் உஜ்ஜைனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு உடல்நிலை மோசமடையவே இந்தூரில் உள்ள மெதந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி யோகிதா நேற்று மரணமடைந்தார்.
தீவிர தொற்று காரணமாக அவரது நுரையீரலில் 80 சதவீதத்துக்கு மேல் தொற்று பரவியிருந்ததாகவும், உயிர்காக்கும் மருந்துகள் அளித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை என்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
யோகிதா சோலங்கி தனது கணவர் மற்றும் ஒரு மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். அவரது மறைவுக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பா.ஜனதாவினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியான தாவர்சந்த் கெலாட்டின் மகள், யோகிதா சோலங்கி (வயது 42). கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் உஜ்ஜைனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு உடல்நிலை மோசமடையவே இந்தூரில் உள்ள மெதந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி யோகிதா நேற்று மரணமடைந்தார்.
தீவிர தொற்று காரணமாக அவரது நுரையீரலில் 80 சதவீதத்துக்கு மேல் தொற்று பரவியிருந்ததாகவும், உயிர்காக்கும் மருந்துகள் அளித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை என்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
யோகிதா சோலங்கி தனது கணவர் மற்றும் ஒரு மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். அவரது மறைவுக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பா.ஜனதாவினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X