என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதியில் ரூ.1 கோடிக்கு கீழ் குறைந்த உண்டியல் வருமானம்
Byமாலை மலர்3 May 2021 7:43 AM GMT (Updated: 3 May 2021 12:31 PM GMT)
திருப்பதியில் 10824 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 5503 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.78 லட்சம் உண்டியல் வசூலாகியிருந்தது. தொடர்ந்து ரூ.1 கோடிக்கு கீழ் உண்டியல் வருமானம் குறைந்து வருகிறது.
திருப்பதி
கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உயிர்சேதம் மட்டுமல்லாமல் பொருளாதார சேதமும் இதனால் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து உலக மக்கள் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ தேவஸ்தானம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுந்தரகாண்ட பாராயணத்தை தொடங்கியது.
திருமலை ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் இந்தப் பாராயணம் தினசரி காலை 7 மணி முதல் 8 மணி வரை நடந்து வருகிறது. சுந்தரகாண்டத்தில் மொத்தம் 68 சர்க்கங்கள் உள்ளன. இதில் தினசரி 10 முதல் 20 ஸ்லோகங்கள் என பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.
சுந்தரகாண்ட பாராயணம் தொடங்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வரை 326 நாட்களில் 57 சர்க்கங்கள் முழுவதும் பாராயணம் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு செய்யப்படும் பாராயணம் 100 முதல் 200 ஸ்லோகங்களை நிறைவு செய்தவுடன் அதை அகண்ட பாராயணம் மகா தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமையில்) 13ஆம் கட்ட சுந்தரகாண்ட பாராயணம் நடந்தது.
அதில் 55 முதல் 57 வது சர்க்கங்களில் உள்ள 171 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டன.திருமலையில் தர்மகிரி வேதபாடசாலை தலைமை ஆச்சாரியார் சிவசுப்பிரமணிய அவதானி தலைமையில் 200 வேத பண்டிதர்கள் இந்த பாராயணத்தை நடத்தினர்.
இதில் தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதியில் நேற்று முன்தினம் 9703 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் 5734 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.46 லட்சம் வசூலாகியுள்ளது.
இந்த ஆண்டில் இதுதான் மிக குறைந்த உண்டியல் வருவாயாகும்.
திருப்பதியில் நேற்று 10824 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 5503 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.78 லட்சம் உண்டியல் வசூலாகியிருந்தது. தொடர்ந்து ரூ.1 கோடிக்கு கீழ் உண்டியல் வருமானம் குறைந்து வருகிறது.
கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உயிர்சேதம் மட்டுமல்லாமல் பொருளாதார சேதமும் இதனால் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து உலக மக்கள் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ தேவஸ்தானம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுந்தரகாண்ட பாராயணத்தை தொடங்கியது.
திருமலை ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் இந்தப் பாராயணம் தினசரி காலை 7 மணி முதல் 8 மணி வரை நடந்து வருகிறது. சுந்தரகாண்டத்தில் மொத்தம் 68 சர்க்கங்கள் உள்ளன. இதில் தினசரி 10 முதல் 20 ஸ்லோகங்கள் என பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.
சுந்தரகாண்ட பாராயணம் தொடங்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வரை 326 நாட்களில் 57 சர்க்கங்கள் முழுவதும் பாராயணம் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு செய்யப்படும் பாராயணம் 100 முதல் 200 ஸ்லோகங்களை நிறைவு செய்தவுடன் அதை அகண்ட பாராயணம் மகா தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமையில்) 13ஆம் கட்ட சுந்தரகாண்ட பாராயணம் நடந்தது.
அதில் 55 முதல் 57 வது சர்க்கங்களில் உள்ள 171 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டன.திருமலையில் தர்மகிரி வேதபாடசாலை தலைமை ஆச்சாரியார் சிவசுப்பிரமணிய அவதானி தலைமையில் 200 வேத பண்டிதர்கள் இந்த பாராயணத்தை நடத்தினர்.
இதில் தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதியில் நேற்று முன்தினம் 9703 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் 5734 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.46 லட்சம் வசூலாகியுள்ளது.
இந்த ஆண்டில் இதுதான் மிக குறைந்த உண்டியல் வருவாயாகும்.
திருப்பதியில் நேற்று 10824 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 5503 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.78 லட்சம் உண்டியல் வசூலாகியிருந்தது. தொடர்ந்து ரூ.1 கோடிக்கு கீழ் உண்டியல் வருமானம் குறைந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X