என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உலகில் கொரோனாவால் பாதிக்கப்படும் 2 பேரில் ஒருவர் இந்தியர்
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி 3 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது உலகளவில் பல நாடுகளில் நோய் கட்டுக்குள் உள்ளது.
இதனால் நோய் பரவல் வேகமும் குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் 2-வது அலை அதிகம் பேரை தொற்றி வருகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும் போது உலகில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் இரண்டில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவராக இருக்கிறார்.
இந்தியாவில் மராட்டியம் மாநிலத்தில்தான் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. நேற்று 62 ஆயிரம் பேரை தாக்கி உள்ளது. 3,673 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவின் ஒட்டு மொத்த பாதிப்பின் 14 சதவீதம் மராட்டியத்தில் உள்ளது. 40 ஆயிரம் பேருடன் 2-வது இடத்தில் கர்நாடகாவும், 35 ஆயிரம் பேருடன் 3-வது இடத்தில் கேரளாவும் உள்ளன.
தமிழ்நாட்டில் 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்