search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையத்தில் 350 ஊழியர்களுக்கு கொரோனா

    ஏப்ரல் மத்தியில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் கொரோனா பரவத் தொடங்கியது. அப்போது தான் திருப்பதி தொகுதிக்கான எம்.பி. இடைத்தேர்தல் நடைபெற்றது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    கொரோனா அலையின் 2-வது தாக்கம் நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

    இதற்கிடையே ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ மையத்தில் 350 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் பலியான தாகவும், அந்த தகவல் தெரிவிக்கிறது.

    சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய அதிகாரிகள் இது தொடர்பாக கூறியதாவது;-

    ஏப்ரல் மத்தியில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் கொரோனா பரவத் தொடங்கியது. அப்போது தான் திருப்பதி தொகுதிக்கான எம்.பி. இடைத்தேர்தல் நடைபெற்றது.

    கொரோனா பரிசோதனை

    அப்போது விண்வெளி மைய ஊழியர்கள் தேர்தல் பார்வையாளராக பணியாற்றினர். அந்த நேரத்தில் இருந்தே நாள்தோறும் 30 முதல் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி முறையில் பணியாற்றும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஒப்பந்தப்பணியாளர்கள் பணிக்கு வரவழைக்கப்பட வில்லை. தொற்று பரவல் கட்டுப்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×