என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நலமுடன் உள்ளார் - கைலாஷ் விஜய்வர்க்கியா தகவல்
Byமாலை மலர்22 April 2021 9:04 PM GMT (Updated: 22 April 2021 9:04 PM GMT)
முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மரணம் பற்றிய தகவல் புரளி. அவர் நலமுடன் உள்ளார் என கைலாஷ் விஜய் வர்க்கியா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன். இவர் மரணமடைந்து விட்டார் என நேற்று புரளிகள் கிளம்பின. ஆனால், இதில் உண்மை இல்லை என பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜய் வர்க்கியா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மக்களவையின் முன்னாள் சபாநாயகர் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுமித்ரா மகாஜன் நலமுடனேயே உள்ளார். அவரை பற்றிய மரண செய்திகள் வெறும் வதந்தியே என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் வெளியான செய்தியில், சுமித்ராவுக்கு காய்ச்சல் உள்ளது. அவர் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்று முடிவுகள் வெளிவந்தன.
இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் இந்தூர் தொகுதியை சேர்ந்த மிக நீண்டகால பெண் எம்.பி.யான சுமித்ரா மகாஜன் மறைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன் என பதிவிட்டார். ஆனால், இதற்கு பா.ஜ.க. மறுப்பு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன். இவர் மரணமடைந்து விட்டார் என நேற்று புரளிகள் கிளம்பின. ஆனால், இதில் உண்மை இல்லை என பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜய் வர்க்கியா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மக்களவையின் முன்னாள் சபாநாயகர் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுமித்ரா மகாஜன் நலமுடனேயே உள்ளார். அவரை பற்றிய மரண செய்திகள் வெறும் வதந்தியே என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் வெளியான செய்தியில், சுமித்ராவுக்கு காய்ச்சல் உள்ளது. அவர் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்று முடிவுகள் வெளிவந்தன.
இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் இந்தூர் தொகுதியை சேர்ந்த மிக நீண்டகால பெண் எம்.பி.யான சுமித்ரா மகாஜன் மறைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன் என பதிவிட்டார். ஆனால், இதற்கு பா.ஜ.க. மறுப்பு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X