search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுமித்ரா மகாஜன்"

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, ஜோஷியைத் தொடர்ந்து தற்போது சுமித்ரா மகாஜனுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிகிறது. #LokSabhaElections2019 #BJP
    புதுடெல்லி:

    75 வயதை தாண்டிய பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு மத்திய மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த முறை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து வருகிறது.

    தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை மூத்த தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க பா.ஜனதா முடிவு செய்திருந்தது.

    புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு மக்கள் இடையே செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக பா.ஜனதா நம்புகிறது.

    இதனால் மூத்த தலைவர்கள் மீதான தனது முடிவை வேட்பாளர் தேர்வில் மாற்றிக் கொண்டுள்ளது.


    இதன் காரணமாக முன்னாள் துணை பிரதமரான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் மீண்டும் டிக்கெட் கொடுக்கவில்லை.

    அத்வானியின் காந்திநகர் தொகுதி அமித்ஷாவுக்கும், முரளி மனோகர் ஜோஷியின் கான்பூர் தொகுதி சத்யதேவ் பச்சோரிக்கும் ஒதுக்கப்பட்டது.

    இந்த வரிசையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில பா.ஜனதாவினர் அவரிடம் எடுத்து கூறி போட்டியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

    மத்திய பிரதேச மக்களால் ‘தாய்’ என்று அழைக்கப்படும் சுமித்ரா மகாஜனுக்கு வருகிற 12-ந்தேதி 76 வயது நிறைவடைகிறது. ஆனாலும் அவரது உண்மையான வயது 78 என்று கூறப்படுகிறது.

    1989 முதல் பா.ஜனதாவின் கோட்டையாக இந்தூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் சுமித்ரா மகாஜன் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றார். இந்த முறை இந்த தொகுதியில் அவருக்கு பதிலாக முக்கிய தலைவரான கைலாஷ் விஜய் வர்க்கியா நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவர் மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்தூரில் கடைசி கட்டமாக மே 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. #LokSabhaElections2019 #BJP
    பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்துக்கு இரு அவைகளின் சபாநாயகர்கள் இன்று அழைப்பு விடுத்துள்ளனர். #LokSabha #SumitraMahajan #allpartymeeting
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பல்வேறு அலுவல்களை நிறைவேற்ற முடியாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய போராட்டத்தால் ஸ்தம்பித்தது.

    எனினும், வருமானத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு கல்வி,வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டம் உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேறியது.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியின் இறுதி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) வரும் மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் ஜனவரி 30-ம் தேதி அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று அழைப்பு விடுத்துள்ளார். 

    இதேபோல், மாநிலங்களவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடு வரும் 31-ம் தேதி அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த அவைத்தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். #LokSabha #SumitraMahajan #allpartymeeting 
    பாராளுமன்ற மக்களவையில் இருந்து மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று உத்தரவிட்டுள்ளார். #Parliament #ADMKMPs #MekedatuDam
    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர் வள ஆணையம் ஒப்புதல் அளித்து இருந்தது.

    மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாள்தோறும் கோ‌ஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் டெல்லி மேல் சபையிலும் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை கிளப்பி வந்தனர்.

    பாராளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது பிரச்சனையை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் 24 பேரை ‘சஸ்பெண்டு’ செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடவடிக்கை எடுத்தார்.

    இதேபோல் அதற்கு மறுநாள் அமளியில் ஈடுபட்ட மேலும் 7 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற மக்களவை இன்று கூடியதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேகதாது பிரச்சனையை கிளப்பி முழக்கமிட்டனர்.


    அவையை சுமூகமாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். வேணுகோபால், செங்குட்டுவன், ராமசந்திரன் ஆகிய 3 அ.தி.மு.க. எம்.பி. களை இடை நீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

    இதுவரை மக்களவையில் 34 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. எம்.பி.க்களின் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் தம்பித்துரை வலியுறுத்தி உள்ளார். #Parliament #ADMKMPs
    பாராளுமன்ற மக்களவையில் இருந்து எம்.பி.க்களை இடைக்கால நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை தாயுள்ளத்துடன் சுமித்ரா மகாஜன் ரத்து செய்ய வேண்டும் என தம்பிதுரை கேட்டு கொண்டார். #Thambidurai #revokedecision #AIADMK #TDP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எம்பிக்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக கடந்த இரண்டாம் தேதி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னரும் அமளி நீடித்ததால், அதிமுக உறுப்பினர்கள் 24 பேரை 5 நாட்களுக்கு கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
     
    இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், அதிமுக எம்பிக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். 

    இதனால் அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. அதிமுக உறுப்பினர்களுடன் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் அவையின் மையப்பகுதிக்கு சென்று சபாநாயகர் இருக்கையின் அருகே ஒன்றுகூடி அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

    இதையடுத்து, அருண்மொழித்தேவன், கோபாலகிருஷணன், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், மருதுராஜா உள்ளிட்ட 7 அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அவர்கள் 7 பேரும் தொடர்ந்து 4 அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். இதேபோல், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 15 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்திற்குள் கூட்டத் தொடரும் முடிவடையும். எனவே இந்த எம்பிக்கள் அனைவரும் வரும் 8-ம் தேதியுடன் முடைவடியும் இந்த குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க இயலாத நிலை நீடிக்கின்றது.

    இந்நிலையில், இன்று மக்களவை கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, அதிமுக மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.க்களை இடைக்கால நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை தாயுள்ளத்துடன் சுமித்ரா மகாஜன் ரத்து செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். 

    நீங்கள் ஏற்கனவே அவர்களை தண்டித்து விட்டீர்கள். இரண்டு நாட்களாக அவர்கள் அவைக்கு வரவில்லை. எனவே, தாயுள்ளத்துடன் இந்த உத்தரவை நீங்கள் ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மிகவும் கனத்த உள்ளத்துடன்தான் இந்த நடவடிக்கையை எடுக்க நேர்ந்தது. அவையின் மையப்பகுதிக்கு வந்து அவர்கள் செய்த அமளியை இந்த நாடும் ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது. முக்கியமான சில விவகாரங்கள் தொடர்பாக மற்ற உறுப்பினர்களை பேச விடாமல் அவர்கள் இடையூறு செய்தனர்.

    இந்த அவையை நடத்த வேண்டும் என்பதற்காகவே அவர்களை இடைநீக்கம் செய்ய நேர்ந்தது. இதுதொடர்பாக, நீங்கள் (தம்பிதுரை) எனது அறைக்கு வந்து பேசலாம். இதர கட்சி தலைவர்களுடன் கலந்துபேசி உங்கள் கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டார். #Thambidurai  #revokedecision #AIADMK #TDP 
    மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவை சேர்ந்த மேலும் 7 எம்பிக்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சஸ்பெண்ட் செய்துள்ளார். #WinterSession #ADMKMPsProtest
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே, மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எம்பிக்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னரும் அமளி நீடித்ததால், அதிமுக உறுப்பினர்கள் 24 பேர் 5 நாட்களுக்கு கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், அதிமுக எம்பிக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. அதிமுக உறுப்பினர்களுடன் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

    இதையடுத்து அருண்மொழித்தேவன், கோபாலகிருஷணன், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், மருதுராஜா உள்ளிட்ட 7 அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அவர்கள் 7 பேரும் மக்களவையில் தொடர்ந்து 4 அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்திற்குள் கூட்டத் தொடரும் முடிவடைந்துவிடும். எனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எம்பிக்கள் அனைவரும் இந்த கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது. #WinterSession #ADMKMPsProtest
    பாராளுமன்ற மக்களவை ஒழுங்குமுறை குழு தலைவராக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று மீண்டும் நியமித்துள்ளார். #BJP #Advani #EthicsPanel
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் எம்.பி.க்கள் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக புகார்கள் குறித்து விசாரிக்க மக்களவை ஒழுங்குமுறை குழு உள்ளது. நன்னடத்தை விதிமுறைகளை மீறும் எம்.பி.க்கள் சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரிக்கும் அதிகாரம் இக்குழுவிற்கு உள்ளது.

    இக்குழுவின் தலைவராக பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இருந்து வந்தார். இந்நிலையில், இந்த பதவியில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவரை மீண்டும் இன்று  நியமித்துள்ளார்.

    இதேபோல், பாராளுமன்ற கூட்டங்களில் பங்கேற்காத உறுப்பினர்களை கண்காணிக்கும் குழுவின் தலைவராக பி.கருணாகரன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


    மேலும், அரசு அளித்த வாக்குறுதிகள் தொடர்பான குழுவின் தலைவராக ரமேஷ் போக்ரியால் நிஷான்க், அவையில் முன்வைக்கப்பட்டும் மசோதாக்கள் கண்காணிப்பு குழுவின் தலைவராக சந்திரகாந்த் பி கைரே மற்றும் துணை சட்டங்கள் குழுவின் தலைவராக திலிப்குமார் மன்சுக்லால் காந்தி ஆகியோரும் மீண்டும் அப்பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மக்களவை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BJP #Advani #EthicsPanel
    மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த கூட்டத்தொடரில் 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. #LokSabha #MonsoonSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 17-ம் தேதி துவங்கியது. இன்றுடன் இந்த மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தொடரில் 20 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜி.எஸ்.டி உட்பட 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நேரமல்லாத நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

    தனது இறுதி உரையில் மக்களுக்கும், மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்த மக்களவை மழைக்கால கூட்டத்தொடரில் 17 முறை அவை கூட்டப்பட்டதாகவும், 112 மணி நேரங்கள் அவை நடைபெற்றதாகவும் சபாநாயகர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். #LokSabha
    பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது மோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். #LokSabha #NoConfidenceMotion #PMModi #RahulGandhi #SumitraMahajan
    புதுடெல்லி:

    மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசினார்.

    தனது உரையை முடித்த பின்னர், யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்ற ராகுல் காந்தி மோடியை கட்டிப் பிடித்தார். பதிலுக்கு மோடியும் சிரித்துக் கொண்டே ராகுல் காந்தியின் கையை பிடித்து குலுக்கி அவருக்கு  வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது மோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது அவரை ராகுல் காந்தி கட்டித் தழுவியது ஏற்கத்தக்கது அல்ல. இது அவையின் மாண்பை குறைக்கும் செயல்.

    அவையில் மாண்புகள் நிச்சயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வெளியில் இருந்து வந்து யாரும் அவைக்கு பாதுகாப்பு தரமுடியாது. அவையில் இருக்கும் நீங்கள் தான் இதற்கு முழு பொறுப்பு என தெரிவித்துள்ளார். #LokSabha #NoConfidenceMotion #PMModi #RahulGandhi #SumitraMahajan
    பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடாமல் எஞ்சியிருக்கும் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு கோரி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடிதம் எழுதியுள்ளார். #Parliment
    புதுடெல்லி :

    பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதால் அலுவல்களை முடிப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. எனவே, எஞ்சியிருக்கும் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த அனைத்து கட்சி சேர்ந்த உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உறுப்பினர்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடிதம் எழுதியுள்ளார்.

    உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எழுதிய கடிததில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

    பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில் போன்றது அதன் புனிதம் மற்றும் கவுரவத்தை காப்பாற்றும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது அனைத்து உறுப்பினர்களின் செயல்பாடுகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஊடகங்களும் அவையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் மக்களிடம் தெளிவாக எடுத்து சொல்கின்றன.

    கடைசியாக நடைபெற்ற கூட்டத்தொடரின்போது உறுப்பினர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பி, அவையினுள் பதாகைகளை தாங்கி பிடித்து கடும் அமளியில் ஈடுபட்டதால் அடிக்கடி அவையை ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டது.  

    இந்நிலையில், ஆட்சியின் கடைசி ஆண்டில் 3 பாராளுமன்ற கூட்டத்தொடர் மட்டுமே மீதம் உள்ளன. நேரம் மிகவும் குறைவாக உள்ள நிலையில் முடிக்க வேண்டிய அலுவல்கள் மிக அதிகமாக உள்ளது. எனவே இம்மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தொடரின் போது கட்சி வேறுபாடு பார்க்காமல் உறுப்பினர்கள் அமைதியான முறையில் அவையை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். #Parliment
    சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையிலான பாராளுமன்ற எம்.பி.க்கள் குழு பெலாரஸ், லத்வியா, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஒருவார பயணமாக வரும் பத்தாம் தேதி புறப்பட்டு செல்கிறது. #LSSpeaker #parliament
    புதுடெல்லி:

    உலக நாடுகளில் உள்ள பாராளுமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காகவும், உறவுகளை பலப்படுத்தும் விதமாகவும் நமது நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் நல்லெண்ண பயணமாக சில நாடுகளுக்குச் சென்று வருவது வழக்கம்.

    அவ்வகையில், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையிலான பாராளுமன்ற எம்.பி.க்கள் குழு பெலாரஸ், லத்வியா, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஒருவார பயணமாக வரும் பத்தாம் தேதி புறப்பட்டு செல்கிறது.

    இந்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜிவ் பிரதாப் ருடி, சுதிப் பந்த்யோபாத்யாய், ஜெய்ஸ்ரீபென் பட்டேல், டாக்டர் கே,கேசவ் ராவ், அரவிந்த் சாவந்த், ஜி.வி.எல். நரசிம்ம ராவ் மற்றும் மக்களவை செயலாளர் ஸ்னேகலதா ஸ்ரீவத்சவா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த ஒருவாரகால பயணத்தின்போது பெலாரஸ் குடியரசின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுக்காஷென்க்கோ மற்றும் பெலாரஸ் பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை சபாநாயகர்களை இந்த குழுவினர் சந்திக்கின்றனர். இதேபோல், லத்வியா மற்றும் பின்லாந்து நாட்டு பாராளுமன்ற சபாநாயகர்களை சந்தித்துப் பேசும் இவர்கள் வரும் 18-ம் தேதி டெல்லி திரும்புகின்றனர். #LSSpeaker #parliament
    ×