என் மலர்
நீங்கள் தேடியது "அதிமுக எம்பிக்கள்"
- அ.தி.மு.க. மேல் சபை எம்.பி.யாக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட ஐ.எஸ். இன்பதுரை அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக இருந்து வருகிறார்.
- அ.தி.மு.க. சார்பில் இன்னொரு மேல்-சபை எம்.பி.யாக பதவியேற்றுள்ள தனபால் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மேல்-சபையில் எம்.பி.க்களாக இருக்கும் தமிழர்களில் 6 பேரின் பதவிக்காலம் கடந்த 24-ந்தேதி நிறைவுபெற்றது. இதையடுத்து புதிய எம்.பி.க்களாக தி.மு.க.வைச் சேர்ந்த வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் எம்.பி.யாக தேர்வானார். இவர்கள் 4 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.
அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் புதிய எம்.பி.க்களாக தேர்வாகி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் 28-ந்தேதி பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) அவர்கள் மேல் சபையில் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு மேல்சபை துணைத் தலைவர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார்.
அ.தி.மு.க. மேல் சபை எம்.பி.யாக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட ஐ.எஸ். இன்பதுரை அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக இருந்து வருகிறார்.
நெல்லை மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்த இவர் அ.தி.மு.க.வில் சிறுபான்மை பிரிவு ,தேர்தல் பிரிவு ஆகியவற்றிலும் பொறுப்புக்களை வகித்திருக்கிறார்.
கடந்த 2023-ம் ஆண்டு முதல் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக பணியாற்றி வரும் இன்பதுரை அ.தி.மு.க. தொடர்பான பல்வேறு வழக்குகளில் ஆஜராகி திறம்பட வாதாடி வெற்றி தேடி தந்திருக்கிறார்.
அரசு பிளீடர்,தமிழ்நாடு மின்வாரிய நிலை குழு பொறுப்புகளையும் இவர் வகித்துள்ளார். தென் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021-ல் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே அங்கு தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில் தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி , இன்பதுரையை மேல்சபை எம்.பி.யாக்கி உள்ளார்.
இதன்மூலம் தமிழகத்தில் மட்டுமே ஒலித்து வந்த வக்கீல் இன்பதுரையின் குரல் இனி டெல்லி மேல் சபையிலும் தமிழகத்தின் குரலாக வலுவாகவே ஒலிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. சார்பில் இன்னொரு மேல்-சபை எம்.பி.யாக பதவியேற்றுள்ள தனபால் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.
திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் 1991-ம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் சொக்கலிங்கம் மற்றும் பா.ம.க. வேட்பாளர் பழனிச்சாமி ஆகிய இருவரையும் தோற்கடித்து 56 சதவீத வாக்குகளை பெற்று தனபால் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.
விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

37 அ.தி.மு.க. எம்.பி.க்களால் பயன் இல்லை என்று பிரேமலதா கூறியதை ஏற்க முடியாது. மேகதாது பிரச்சனையில் அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்கள்தான் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தனர்.
தே.மு.தி.க. மீது நாங்கள் மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை. யாரையும் கடுமையாக விமர்சித்தாலும் மறப்போம், மன்னிப்போம் என்பதுதான் எங்கள் கொள்கை.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterJayakumar #PremalathaVijayakanth
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர் வள ஆணையம் ஒப்புதல் அளித்து இருந்தது.
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாள்தோறும் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் டெல்லி மேல் சபையிலும் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை கிளப்பி வந்தனர்.
பாராளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது பிரச்சனையை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் 24 பேரை ‘சஸ்பெண்டு’ செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடவடிக்கை எடுத்தார்.
இதேபோல் அதற்கு மறுநாள் அமளியில் ஈடுபட்ட மேலும் 7 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இதுவரை மக்களவையில் 34 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. எம்.பி.க்களின் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் தம்பித்துரை வலியுறுத்தி உள்ளார். #Parliament #ADMKMPs
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ரபேல் ஒப்பந்த விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த பிரச்சினைகனை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக உறுப்பினர்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், எம்பிக்கள் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அவையை 12 வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். #WinterSession #ADMKMPsProtest
புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று பாராளுமன்றம் கூடியபோது ரபேல் போர் விமான பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் காரசாரமாக விவாதித்தார்.
அவைக்கு வந்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல தைரியம் இல்லாத பிரதமர் மோடி, தனது அறைக்குள் பதுங்கி கொண்டதாக ராகுல் குறிப்பிட்டார்.
சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, தன்மீது தனிப்பட்ட முறையில் இதுவரை எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என கூறியதை இன்று சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, ரபேல் விவகாரத்தில் இந்த நாடே அவரிடம் ஒரு நேரடியான கேள்வி கேட்டுவரும் நிலையில் மோடி இப்படி பொய் பேசி வருவதாக தெரிவித்தார்.
நொடிந்த நிலையில் இருக்கும் நண்பர் அனில் அம்பானிக்கு உதவி செய்வதற்காகவே ரபேல் கொள்முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மோடி நுழைத்து விட்டார் என்றும் ராகுல் குற்றம் சுமத்தினார்.

இதற்கு நிதிமந்திரி அருண் ஜெட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நீங்கள் அவையில் வெளியிடும் ஆடியோ முழுக்கமுழுக்க நம்பத்தன்மை மிக்கது என்று பொறுப்பேற்று கொள்கிறீர்களா? என ராகுலிடம் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பினார்.
அப்படி எல்லாம் பொறுப்பேற்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்தபோது தொடர்ந்து பொய்களை பேசிவருவதே உங்களது வேலையாகி விட்டது என அருண் ஜெட்லி கோபமாக கூறினார். இதை தொடர்ந்து அந்த ஆடியோவை ஒலிபரப்ப சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார்.
இந்த விவாதத்தின் இடையே காவிரி பிரச்சனையை மையமாக வைத்து அவையில் அமளியில் ஈடுபடும் அ.தி.மு.க.வினர் ரபேல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினரை பேச விடாமல் இதிலிருந்து மோடியை காப்பாற்றும் நோக்கத்தில் இடையூறு செய்து வருவதாகவும் ராகுல் காந்தி நேரடியாக குற்றம்சாட்டினார். #RahulGandhi #Rafalescam
கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஏராளமான பேர் வீடுகளை இழந்ததுடன், லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை, பலா மரங்களும் சாய்ந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களும் நாசமானது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட இன்னும் ஒதுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை இன்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சந்தித்து கஜா புயல் நிவாரணத்துக்கு உடனே நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர். #GajaCyclone #ArunJaitley #ADMKMPs
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தற்போதைய எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்தின்போது ரிசர்வ் வங்கி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி. ரஞ்சீத் ரஞ்சன் மக்களவையில் இன்று நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். மேகதாது விவகாரம் தொடர்பாக முதலில் விவாதிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அமளி நீடித்ததால் அவையை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த கூட்டத் தொடரில் ரிசர்வ் வங்கி விவகாரம், அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதால் கூட்டத் தொடர் முழுவதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. #MekedatuIssue #ADMK #WinterSession






