search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்வானி, ஜோஷியை தொடர்ந்து சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தேர்தலில் டிக்கெட் இல்லை
    X

    அத்வானி, ஜோஷியை தொடர்ந்து சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தேர்தலில் டிக்கெட் இல்லை

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, ஜோஷியைத் தொடர்ந்து தற்போது சுமித்ரா மகாஜனுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிகிறது. #LokSabhaElections2019 #BJP
    புதுடெல்லி:

    75 வயதை தாண்டிய பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு மத்திய மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த முறை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து வருகிறது.

    தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை மூத்த தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க பா.ஜனதா முடிவு செய்திருந்தது.

    புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு மக்கள் இடையே செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக பா.ஜனதா நம்புகிறது.

    இதனால் மூத்த தலைவர்கள் மீதான தனது முடிவை வேட்பாளர் தேர்வில் மாற்றிக் கொண்டுள்ளது.


    இதன் காரணமாக முன்னாள் துணை பிரதமரான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் மீண்டும் டிக்கெட் கொடுக்கவில்லை.

    அத்வானியின் காந்திநகர் தொகுதி அமித்ஷாவுக்கும், முரளி மனோகர் ஜோஷியின் கான்பூர் தொகுதி சத்யதேவ் பச்சோரிக்கும் ஒதுக்கப்பட்டது.

    இந்த வரிசையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில பா.ஜனதாவினர் அவரிடம் எடுத்து கூறி போட்டியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

    மத்திய பிரதேச மக்களால் ‘தாய்’ என்று அழைக்கப்படும் சுமித்ரா மகாஜனுக்கு வருகிற 12-ந்தேதி 76 வயது நிறைவடைகிறது. ஆனாலும் அவரது உண்மையான வயது 78 என்று கூறப்படுகிறது.

    1989 முதல் பா.ஜனதாவின் கோட்டையாக இந்தூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் சுமித்ரா மகாஜன் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றார். இந்த முறை இந்த தொகுதியில் அவருக்கு பதிலாக முக்கிய தலைவரான கைலாஷ் விஜய் வர்க்கியா நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவர் மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்தூரில் கடைசி கட்டமாக மே 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. #LokSabhaElections2019 #BJP
    Next Story
    ×