search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற மக்களவை ஒழுங்குமுறை குழு தலைவராக மீண்டும் அத்வானி நியமனம்
    X

    பாராளுமன்ற மக்களவை ஒழுங்குமுறை குழு தலைவராக மீண்டும் அத்வானி நியமனம்

    பாராளுமன்ற மக்களவை ஒழுங்குமுறை குழு தலைவராக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று மீண்டும் நியமித்துள்ளார். #BJP #Advani #EthicsPanel
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் எம்.பி.க்கள் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக புகார்கள் குறித்து விசாரிக்க மக்களவை ஒழுங்குமுறை குழு உள்ளது. நன்னடத்தை விதிமுறைகளை மீறும் எம்.பி.க்கள் சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரிக்கும் அதிகாரம் இக்குழுவிற்கு உள்ளது.

    இக்குழுவின் தலைவராக பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இருந்து வந்தார். இந்நிலையில், இந்த பதவியில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவரை மீண்டும் இன்று  நியமித்துள்ளார்.

    இதேபோல், பாராளுமன்ற கூட்டங்களில் பங்கேற்காத உறுப்பினர்களை கண்காணிக்கும் குழுவின் தலைவராக பி.கருணாகரன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


    மேலும், அரசு அளித்த வாக்குறுதிகள் தொடர்பான குழுவின் தலைவராக ரமேஷ் போக்ரியால் நிஷான்க், அவையில் முன்வைக்கப்பட்டும் மசோதாக்கள் கண்காணிப்பு குழுவின் தலைவராக சந்திரகாந்த் பி கைரே மற்றும் துணை சட்டங்கள் குழுவின் தலைவராக திலிப்குமார் மன்சுக்லால் காந்தி ஆகியோரும் மீண்டும் அப்பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மக்களவை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BJP #Advani #EthicsPanel
    Next Story
    ×