என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் தடுப்பூசி திருவிழாவில் 1.28 கோடி பேருக்கு தடுப்பூசி
Byமாலை மலர்15 April 2021 9:24 PM GMT (Updated: 15 April 2021 9:24 PM GMT)
இந்தியாவில் ஏப்ரல் 11 முதல் 14 வரையில் தடுப்பூசி திருவிழா அறிவித்து, தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
புதுடெல்லி:
இந்தியாவில் ஏப்ரல் 11 முதல் 14 வரையில் தடுப்பூசி திருவிழா அறிவித்து, தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி தேசிய அளவில் தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. இந்த தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் (11-ந் தேதி) 29 லட்சத்து 33 ஆயிரத்து 418 டோஸ்களும், 12-ந் தேதி 40 லட்சத்து 4 ஆயிரத்து 521 டோஸ்களும், 13-ந் தேதி 26 லட்சத்து 46 ஆயிரத்து 528 டோஸ்களும், 14-ந் தேதி 33 லட்சத்து 13 ஆயிரத்து 848 டோஸ்களும் போடப்பட்டுள்ளன.
மொத்தமாக இந்த 4 நாளில் 1 கோடியே 28 லட்சத்து 98 ஆயிரத்து 314 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையின்போது சுமார் 16 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தடுப்பூசி திருவிழாவின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை என்றபோதும், பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டதால் 29 லட்சத்துக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஏப்ரல் 11 முதல் 14 வரையில் தடுப்பூசி திருவிழா அறிவித்து, தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி தேசிய அளவில் தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. இந்த தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் (11-ந் தேதி) 29 லட்சத்து 33 ஆயிரத்து 418 டோஸ்களும், 12-ந் தேதி 40 லட்சத்து 4 ஆயிரத்து 521 டோஸ்களும், 13-ந் தேதி 26 லட்சத்து 46 ஆயிரத்து 528 டோஸ்களும், 14-ந் தேதி 33 லட்சத்து 13 ஆயிரத்து 848 டோஸ்களும் போடப்பட்டுள்ளன.
இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையின்போது சுமார் 16 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தடுப்பூசி திருவிழாவின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை என்றபோதும், பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டதால் 29 லட்சத்துக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X