search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    டெல்லி சிறைகளில் கொரோனா பாதித்த 67 கைதிகளுக்கு சிகிச்சை

    டெல்லியில் திகார், ரோகிணி, மண்டோலி என்ற 3 சிறைகள் உள்ளன. அவற்றில் இதுவரை மொத்தம் 190 கைதிகளுக்கும், 304 சிறை ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
    புதுடெல்லி:

    டெல்லியில் திகார், ரோகிணி, மண்டோலி என்ற 3 சிறைகள் உள்ளன. அவற்றில் இதுவரை மொத்தம் 190 கைதிகளுக்கும், 304 சிறை ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    121 கைதிகளும், 293 ஊழியர்களும் குணமடைந்து விட்டனர். 2 கைதிகள் இறந்து விட்டனர். 67 கைதிகளும், 11 ஊழியர்களும் இன்னும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்களில், மண்டோலி சிறை சூப்பிரண்டு, திகார் சிறை டாக்டர்கள் 2 பேர் ஆகியோரும் அடங்குவர். இந்த தகவலை சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் தெரிவித்தார்.

    டெல்லி சிறைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது.
    Next Story
    ×