என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரவலை தடுக்க சிறந்த வழி எது? - உலக சுகாதார நிறுவனம் தகவல்
Byமாலை மலர்10 April 2021 8:34 PM GMT (Updated: 10 April 2021 8:34 PM GMT)
கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு கொரோனா காலத்துக்கான பொருத்தமான விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதுதான் சிறந்த வழி ஆகும்
புதுடெல்லி:
உலக சுகாதார நிறுவனத்தின் தெற்கு, கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை பற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு கொரோனா காலத்துக்கான பொருத்தமான விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதுதான் சிறந்த வழி ஆகும். பரிசோதனைகளை அதிகரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பு தடம் அறியவும், பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் முயற்சிகளை மேம்படுத்த வேண்டும்” என கூறினார்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு பொதுமக்கள் இருமும்போது அதன்துளிகள் மற்றவர்கள் மீது படாத வகையில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கைச்சுத்தம் பராமரித்து வர வேண்டும். தனிமனித இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தனி மனித இடைவெளியை பின்பற்றுவதும், போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதும் கொரோனா பரவலை மெதுவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலக சுகாதார நிறுவனத்தின் தெற்கு, கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை பற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு கொரோனா காலத்துக்கான பொருத்தமான விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதுதான் சிறந்த வழி ஆகும். பரிசோதனைகளை அதிகரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பு தடம் அறியவும், பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் முயற்சிகளை மேம்படுத்த வேண்டும்” என கூறினார்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு பொதுமக்கள் இருமும்போது அதன்துளிகள் மற்றவர்கள் மீது படாத வகையில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கைச்சுத்தம் பராமரித்து வர வேண்டும். தனிமனித இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தனி மனித இடைவெளியை பின்பற்றுவதும், போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதும் கொரோனா பரவலை மெதுவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X