என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் 50 கிலோ தங்க நகை கடத்தல் - 2 வடமாநில வாலிபர்கள் சிக்கினர்
Byமாலை மலர்10 April 2021 10:59 AM GMT (Updated: 10 April 2021 5:35 PM GMT)
சென்னையில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 50 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 வடமாநில வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
சென்னையில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு நேற்று மங்களா ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் இன்று காலை கோழிக்கோடு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரெயிலில் இருந்து 2 வடமாநில வாலிபர்கள் இறங்கினர். அவர்கள் சிறிது நேரம் அங்கேயே சுற்றி திரிந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப்பின்முரணாக பதில் கூறினர். இதனையடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர்கள் சென்னையில் இருந்து கேரளாவுக்கு 50 கிலோ தங்க நகை கடத்தி வந்ததாக கூறினர்.
இதனையடுத்து 50 கிலோ நகையை போலீசார் பறிமுதல் செய்து ஜி.எஸ்.டி. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடத்தி வந்தவர்களின் பெயர்களை போலீசார் கூறுமறுத்துவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X