என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பத்மனம்திட்டா அருகே தண்ணீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்மனம் திட்டா அருகே உள்ள ராணி பகுதியை சேர்ந்தவர் பிரகாத் என்பவரின் மகன் அபிஷேக் (வயது 14). அதே பகுதியை சேர்ந்தவர் அஜித் மகன் அபிஜிம் (14).
நண்பர்களான இவர்கள் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். மேலும் தன்னுடன் படித்த பரியாரத்து பகுதியை சேர்ந்த விஜு மகன் துர்காது என்பவருடன் அருகில் உள்ள நீர்நிலை நிறைந்த வெள்ளகாட்டத்தில் விளையாட சென்றனர்.
விளையாடிவிட்டு திரும்பிய அவர்கள் அபிஜித்தின் செல்போனை அங்கு வைத்துவிட்டு வந்துவிட்டனர். இதனால் அங்கு செல்போனை எடுக்க அப்பகுதிக்கு திரும்பி சென்றனர். அப்போது அபிஜித் பள்ளமான நீர்நிலையில் கால்தவறி விழுந்தார்.
இதனை கண்ட அபிஷேக் அவரை மீட்க முயன்றார். ஆனால் அவரும் அந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டார். சிறுவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதற்குள் சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கிவிட்டனர்.
இதையடுத்து போலீஸ் மற்றும் தீயணைப்புதுறைக்கு தகவல் அனுப்பினர். விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி சிறுவர்கள் இருவரையும் பிணமாக மீட்டனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்