என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ் நிலையத்தில் கள்ளச்சாராயம் மாயமானதற்கு எலிகளே காரணம் - போலீஸ்காரர்கள் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி
Byமாலை மலர்28 March 2021 7:13 PM GMT (Updated: 28 March 2021 7:13 PM GMT)
அதிக அளவில் வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம் மாயமானதற்கு எலிகள் மீது பழியை போட்டிருக்கும் போலீசாரின் செயல் மூத்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இடா:
உத்தரபிரதேசத்தின் இடா மாவட்டத்துக்கு உட்பட்ட கோட்வாலி தெகாட் போலீஸ் நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த ஏராளமான கள்ளச்சாராய பாட்டில்கள் காணாமல் போயிருக்கின்றன. அதாவது 1,450 அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இந்த கள்ளச்சாராய பாட்டில்கள் மாயமாகி இருப்பது கடந்த வாரம் தெரியவந்தது.
இது குறித்து அந்த போலீசாரிடம் விசாரித்தபோது அவை அனைத்துக்கும் எலிதான் காரணம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். அதேநேரம், 239 அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம் எலிகளால் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸ் நிலைய டைரியில் எழுதப்பட்டு இருந்தது.
அதிக அளவில் வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம் மாயமானதற்கு எலிகள் மீது பழியை போட்டிருக்கும் போலீசாரின் செயல் மூத்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து கோட்வாலி தெகாட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இந்ரேஷ்பால் சிங் மற்றும் கிளார்க் ரிஷால் சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
உத்தரபிரதேசத்தின் இடா மாவட்டத்துக்கு உட்பட்ட கோட்வாலி தெகாட் போலீஸ் நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த ஏராளமான கள்ளச்சாராய பாட்டில்கள் காணாமல் போயிருக்கின்றன. அதாவது 1,450 அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இந்த கள்ளச்சாராய பாட்டில்கள் மாயமாகி இருப்பது கடந்த வாரம் தெரியவந்தது.
இது குறித்து அந்த போலீசாரிடம் விசாரித்தபோது அவை அனைத்துக்கும் எலிதான் காரணம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். அதேநேரம், 239 அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம் எலிகளால் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸ் நிலைய டைரியில் எழுதப்பட்டு இருந்தது.
அதிக அளவில் வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம் மாயமானதற்கு எலிகள் மீது பழியை போட்டிருக்கும் போலீசாரின் செயல் மூத்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து கோட்வாலி தெகாட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இந்ரேஷ்பால் சிங் மற்றும் கிளார்க் ரிஷால் சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X