என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசாமில் அனல் பறக்கும் பிரசாரம்... பிரதமர் மோடிக்கு சரமாரி கேள்வி எழுப்பிய பிரியங்கா
Byமாலை மலர்21 March 2021 10:32 AM GMT (Updated: 21 March 2021 10:32 AM GMT)
அசாம் தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களிடம் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசினீர்களா? என பிரதமருக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.
ஜோர்கத்:
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அசாம் மாநிலம் ஜோர்கத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நேற்று பிரதமர் தனது பிரசாரத்தின்போது பேசியதை கேட்டேன். வளர்ச்சியைப் பற்றி அவர் கவலைப்படுவதாக தீவிரமாக பேசினார். அவர் அசாமின் வளர்ச்சி, அசாமில் பாஜக எப்படி செயல்படவேண்டும் என்பது பற்றிதான் பேசுவதாக நினைத்தேன். ஆனால், அவர் 22 வயது பெண்ணின் டுவிட்டர் பதிவைப் பற்றி கவலைப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மக்களைப்பற்றி அவர் கவலைப்படவில்லை.
வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோதும், சிஏஏ எதிர்ப்பு போராட்டம் மற்றும் அந்த போராட்டத்தின்போது 5 இளைஞர்கள் கொல்லப்பட்டபோதும் பிரதமர் ஏன் கவலைப்படவில்லை?
மக்கள் வெள்ளத்தில் மூழ்கும்போது நீங்கள் ஏன் அசாமுக்கு வரவில்லை? பாஜக அளித்த பெரிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படாதபோது, நீங்கள் ஏன் அதைப்பற்றி கவலைப்படவில்லை? நீங்கள் தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களிடம் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசினீர்களா?
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி 350 ரூபாய் தருவோம் என்று கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், அந்த தொழிலாளர்களின் வலியை பிரதமர் உணரவில்லையா?
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X