என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - அமித்ஷா பிரச்சாரம்
Byமாலை மலர்14 March 2021 3:44 PM GMT (Updated: 14 March 2021 3:44 PM GMT)
மேற்கு வங்க மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 27ந்தேதி தொடங்கி ஏப்ரல் 29ந்தேதி வரை 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மாவட்டங்களில் பாஜக மூத்த தலைவர்கள் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பாஜக சார்பில் காரக்பூரில் இன்று மாலை நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியின் போது தொண்டர்களிடம் பேசிய அமித்ஷா, மேற்கு வங்க மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று தெரிவித்தார். மேலும் சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, பிரதமர் மோடியின் தலைமையில் செயல்படும் பாஜக அரசு மேற்கு வங்கத்தில் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X