என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வரலாறையும், எதிர்காலத்தையும் படைக்கும் திறன் பெற்றவர்கள் பெண்கள் - ராகுல் காந்தி புகழாரம்
Byமாலை மலர்8 March 2021 7:39 PM GMT (Updated: 8 March 2021 7:39 PM GMT)
நமது முன்னோர்கள் கனவு கண்ட இந்தியாவின் உண்மையான அடையாளத்தை அடைவதற்கு பெண்கள் சக்திதான் ஒரே வழி என காங்கிரஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது
புதுடெல்லி:
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘பெண்கள் வல்லமைமிக்க நேர்த்தியுடன் வரலாறு, எதிர்காலத்தை உருவாக்கும் திறன் பெற்றவர்கள். யாரும் உங்களைத் தடுத்து நிறுத்த அனுமதிக்காதீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில், ‘நமது முன்னோர்கள் கனவு கண்ட இந்தியாவின் உண்மையான அடையாளத்தை அடைவதற்கு பெண்கள் சக்திதான் ஒரே வழி. ஒரு உண்மையான, சுதந்திரமான, பாதுகாப்பான, செழுமையான எதிர்காலத்தை அடைவதற்கு நாம் பெண்களுடன் நிற்போம், பெண்களுக்காக நிற்போம், அவர்களைப் பின்தொடர்வோம்’ என்று கூறியுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இந்தியில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘வக்கீல்கள், பைலட்கள், தொழில்முனைவோர், வீராங்கனைகள், டாக்டர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீராங்கனைகள் என்று பெண்களின் பங்கு அதிகரிக்க அதிகரிக்க, இந்த உலகம் மேலும் அழகாகவும், வலிமையாகவும் தோன்றும்.
பஞ்சாயத்து தலைவர்கள் முதல், முதல்-மந்திரி, பிரதமர் வரை பெண்களால் எப்படி அழகாகவும், வலிமையாகவும் நாட்டை வழிநடத்த முடியும் என்பதை இந்தியாவில் பெண்களின் தலைமை காட்டியுள்ளது.
காங்கிரசின் கொள்கைகளால், நாட்டின் உள்ளாட்சி அமைப்பு அமைப்புகளில் பெண்களின் தலைமைத்துவம் வலுப்பெற்றிருப்பதில் நான் பெருமை அடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘பெண்கள் வல்லமைமிக்க நேர்த்தியுடன் வரலாறு, எதிர்காலத்தை உருவாக்கும் திறன் பெற்றவர்கள். யாரும் உங்களைத் தடுத்து நிறுத்த அனுமதிக்காதீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில், ‘நமது முன்னோர்கள் கனவு கண்ட இந்தியாவின் உண்மையான அடையாளத்தை அடைவதற்கு பெண்கள் சக்திதான் ஒரே வழி. ஒரு உண்மையான, சுதந்திரமான, பாதுகாப்பான, செழுமையான எதிர்காலத்தை அடைவதற்கு நாம் பெண்களுடன் நிற்போம், பெண்களுக்காக நிற்போம், அவர்களைப் பின்தொடர்வோம்’ என்று கூறியுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இந்தியில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘வக்கீல்கள், பைலட்கள், தொழில்முனைவோர், வீராங்கனைகள், டாக்டர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீராங்கனைகள் என்று பெண்களின் பங்கு அதிகரிக்க அதிகரிக்க, இந்த உலகம் மேலும் அழகாகவும், வலிமையாகவும் தோன்றும்.
பஞ்சாயத்து தலைவர்கள் முதல், முதல்-மந்திரி, பிரதமர் வரை பெண்களால் எப்படி அழகாகவும், வலிமையாகவும் நாட்டை வழிநடத்த முடியும் என்பதை இந்தியாவில் பெண்களின் தலைமை காட்டியுள்ளது.
காங்கிரசின் கொள்கைகளால், நாட்டின் உள்ளாட்சி அமைப்பு அமைப்புகளில் பெண்களின் தலைமைத்துவம் வலுப்பெற்றிருப்பதில் நான் பெருமை அடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X