search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக தமிழகம் வருகை

    தமிழகம் வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அண்ணாமலைப் பல்கலைக்கழக விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 3 நாட்கள் பயணம் மேற்கொள்வதற்காக தமிழகம் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக வரும் 9-ம் தேதி செவ்வாய்கிழமை மாலை டெல்லியிலிருந்து தனி விமானத்தில் அவர் புறப்படுகிறார். பின்னர் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் வரவேற்பு முடிந்து, காரில் கவர்னர் மாளிகைக்கு புறப்படடுச் செல்கிறார்.

    மறுநாள் 10-ம் தேதி புதன்கிழமையன்று சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் பொற்கோவிலுக்கு செல்கிறார். அதன்பின்பு தனியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்துகொள்கிறார். இதனை தொடர்ந்து வரும் 11-ம் தேதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் அவர் கலந்துகொள்கிறார்.

    தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 11-ம் தேதி பிற்பகலில் சென்னையிலிருந்து தனி விமானத்தில் ராம்நாத் கோவிந்த் டெல்லி செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலைய பகுதியில்  பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 11-ம் தேதி மாலை வரை தொடரும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×