search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மார்ச் 1 முதல் மீண்டும் ஊரடங்கு என கூறி வைரலாகும் தகவல்

    மார்ச் 1 ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


    மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி மார்ச் 1 ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக கூறும் தகவல் அடங்கிய படம் வைரலாகி வருகிறது. வைரல் தகவல் அடங்கிய படம் தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டதை போன்று காட்சியளிக்கிறது.

    மராத்தி மொழியில் இடம்பெற்றுள்ள படத்தில், மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே புகைப்படம் இணைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் மார்ச் 1 ஆம் தேதி முதல் மாநிலம் முழுக்க 15 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு பிறபிக்கப்படுகிறது எனும் தகவல் மராத்தி மொழியில் எழுதப்பட்டு உள்ளது.

     வைரல் புகைப்படம்

    வைரல் பதிவை ஆய்வு செய்ததில், தனியார் செய்தி நிறுவனம் ஊரடங்கு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் உத்தவ் தாக்கரே மீண்டும் ஊரடங்கு உத்தரவு பற்றி எந்த தகவலையும் இதுவரை வழங்கவில்லை என தெரியவந்துள்ளது. 

    அந்த வகையில் மார்ச் 1 முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு என கூறி வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது. வைரல் படம் மார்பிங் செய்யப்பட்டு வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×