என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யுபிஎஸ்சி தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்24 Feb 2021 9:35 AM GMT (Updated: 24 Feb 2021 9:35 AM GMT)
கொரோனா காலத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் இந்திய ஆட்சி பணியான ஐ.ஏ.எஸ்., இந்திய வெளியுறவுப் பணியான ஐ.எப்.எஸ்., போலீஸ் பணியான ஐ.பி.எஸ், சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த தேர்வு குறிப்பிட்ட தேதிக்கு பதிலாக வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 4-ந் தேதி இந்த தேர்வு நடந்தது.
இதையடுத்து இந்த தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கொரோனா காரணமாக கடைசி தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கலாம். மீதம் உள்ளவர்களுக்கும், வயதை கடந்தவர்களுக்கும், வேறு காரணங்களுக்காக தேர்வு எழுதாமல் விட்டவர்களுக்காகவும் எந்த தயவும் அளிக்க முடியாது என்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இந்த மனு மீதான தீர்ப்பை இன்று வழங்கியது. அதில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத கூடுதலாக வாய்ப்பு வழங்க முடியாது. கொரோனா காலத்தில் தேர்வு எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் இந்திய ஆட்சி பணியான ஐ.ஏ.எஸ்., இந்திய வெளியுறவுப் பணியான ஐ.எப்.எஸ்., போலீஸ் பணியான ஐ.பி.எஸ், சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த தேர்வு குறிப்பிட்ட தேதிக்கு பதிலாக வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 4-ந் தேதி இந்த தேர்வு நடந்தது.
இதையடுத்து இந்த தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கொரோனா காரணமாக கடைசி தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கலாம். மீதம் உள்ளவர்களுக்கும், வயதை கடந்தவர்களுக்கும், வேறு காரணங்களுக்காக தேர்வு எழுதாமல் விட்டவர்களுக்காகவும் எந்த தயவும் அளிக்க முடியாது என்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இந்த மனு மீதான தீர்ப்பை இன்று வழங்கியது. அதில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத கூடுதலாக வாய்ப்பு வழங்க முடியாது. கொரோனா காலத்தில் தேர்வு எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X