search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128 பேருக்கு கொரோனா பாதிப்பு

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 157- ஆகும்.

    டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 38 ஆயிரத்து 028- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 26 ஆயிரத்து 086- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10,901- ஆக அதிகரித்து இருக்கிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,041- ஆக உள்ளது.
    Next Story
    ×