என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவின் மிக நீளமான 18 கி.மீ. பாலம் - பிரதமர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
Byமாலை மலர்17 Feb 2021 10:52 PM GMT (Updated: 17 Feb 2021 10:52 PM GMT)
இந்தியாவின் மிக நீளமான 18 கி.மீ. ஆற்றுப்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வழியாக அடிக்கல் நாட்டுகிறார்.
கவுகாத்தி:
அசாமில் துப்ரி-புல்பரி இடையே பிரம்மபுத்ரா ஆற்றின் மீது ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆற்றுப்பாலம் 18 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைய உள்ளது. இந்தியாவின் மிக நீளமான சாலைப் பாலமான இதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) காணொலி காட்சி வழியாக அடிக்கல் நாட்டுகிறார். இதன் சில பகுதிகள் அசாமிலும், சில பகுதிகள் மேகாலயாவின் காரோ குன்றுகள் பகுதியிலும் உள்ளன. மேலும் இது வங்காள தேசத்தின் சர்வதேச எல்லையையொட்டி 11 கிலோமீட்டர் தொலைவில் அமைகிறது.
இந்த பாலம் கட்டப்பட்டால் பயண நேரம் சுமார் 5 மணி நேரம் வரை மிச்சமாகும். ஒரு மணி நேர பரிதாப படகு பயணத்தையும் தவிர்க்கலாம். தற்போது சிறிய ரக படகுகள் மட்டுமே ஆற்றை கடக்க பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பான் நிறுவனம் இந்த திட்டத்திற்கு நிதிஉதவி அளிக்க சம்மதித்துள்ளது. எல் அண்ட் டி நிறுவனம், ரூ.3 ஆயிரத்து 166 கோடி மதிப்பில், 4 வழி பயணப் பாலத்தை அமைத்து தர ஒப்பந்தம் பெற்றறுள்ளது.
அசாமில் துப்ரி-புல்பரி இடையே பிரம்மபுத்ரா ஆற்றின் மீது ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆற்றுப்பாலம் 18 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைய உள்ளது. இந்தியாவின் மிக நீளமான சாலைப் பாலமான இதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) காணொலி காட்சி வழியாக அடிக்கல் நாட்டுகிறார். இதன் சில பகுதிகள் அசாமிலும், சில பகுதிகள் மேகாலயாவின் காரோ குன்றுகள் பகுதியிலும் உள்ளன. மேலும் இது வங்காள தேசத்தின் சர்வதேச எல்லையையொட்டி 11 கிலோமீட்டர் தொலைவில் அமைகிறது.
இந்த பாலம் கட்டப்பட்டால் பயண நேரம் சுமார் 5 மணி நேரம் வரை மிச்சமாகும். ஒரு மணி நேர பரிதாப படகு பயணத்தையும் தவிர்க்கலாம். தற்போது சிறிய ரக படகுகள் மட்டுமே ஆற்றை கடக்க பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பான் நிறுவனம் இந்த திட்டத்திற்கு நிதிஉதவி அளிக்க சம்மதித்துள்ளது. எல் அண்ட் டி நிறுவனம், ரூ.3 ஆயிரத்து 166 கோடி மதிப்பில், 4 வழி பயணப் பாலத்தை அமைத்து தர ஒப்பந்தம் பெற்றறுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X