என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.35000 கோடி ஒதுக்கீடு
Byமாலை மலர்1 Feb 2021 6:01 AM GMT (Updated: 1 Feb 2021 6:48 AM GMT)
கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
6 தூண்கள் என்ற அடிப்படையில் மத்திய பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. சுகாதார கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு சுகாதார திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.64180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய 3 அம்சங்களில் சுகாதாரத்துறை கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்.
கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.
கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.35000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு 1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X