என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை- பிஎஸ்எப் அதிரடி
Byமாலை மலர்15 Jan 2021 10:21 AM GMT (Updated: 15 Jan 2021 10:21 AM GMT)
பஞ்சாப் எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
குர்தாஸ்பூர்:
பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நேற்று இரவு எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து சர்வதேச எல்லையை தாண்டி, இந்திய எல்லைக்குள் ஒருவர் ஊடுருவியிருப்பதை வீரர்கள் கண்டுபிடித்தனர்.
அவரது நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தவே, உடனடியாக அந்த நபரை நோக்கி எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அந்த நபர் உயிரிழந்தார். இந்த தகவலை எல்லைப் பாதுகாப்பு படை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட நபரிடம் எந்த அடையாள அட்டையும் இல்லாததால் அவர் யார் என்பது தெரியவில்லை. விசாரணை நடைபெறுகிறது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரை தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி வரும் பாகிஸ்தான், தொடர்ந்து எல்லையில் அத்துமீறிய தாக்குதல் நடத்துகிறது. அத்துடன், தீவிரவாதிகளை ஊடுருவ செய்து இந்தியாவிற்குள் அமைதியை சீர்குலைக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறது. இதனால் இந்திய வீரர்கள் எல்லைப்பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X