search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்லை பாதுகாப்பு படை"

    • மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறும்.
    • எல்லை பாதுகாப்பு படை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.

    மேற்கு வங்காளத்தின் கிராமப்புறங்களில் ஜூலை 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றுவதற்காக ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

    அவ்வகையில், ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராமல் போகலாம் என்பதை உணர்ந்து எல்லை பாதுகாப்பு படை (BSF) பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறும். பா.ஜ.க. அரசின் பதவிக்காலம் இன்னும் வெறும் 6 மாதங்களே உள்ளது. தேர்தலில் அடையப் போகும் தோல்வியை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். அதனால், அவர்கள் பல்வேறு குழுக்கள் மற்றும் சமூகங்களை லாபி செய்ய முயற்சிக்கவில்லை.

    எல்லா எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளையும் நான் குற்றம் சாட்டவில்லை, அவர்கள் எங்கள் எல்லைகளைக் காக்கிறார்கள். ஆனால் எல்லை பாதுகாப்பு படை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். ஏனெனில், நாளை பா.ஜ.க. ஆட்சியில் இருக்காது. ஆனாலும், அவர்கள் (BSF) தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும், எல்லைப் பகுதிகளில், எல்லை பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு தரப்படும் என்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு வேலைகள் வழங்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

    எல்லையோர பகுதிகளில் உள்ள வாக்காளர்களை பா.ஜ.க. சார்பாக எல்லை பாதுகாப்பு படை மிரட்டுவதாக மம்தா நேற்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்த ஆண்டு 215 ட்ரோன்கள் ஊடுருவல்.
    • சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளவர்களின் முகவரியை கண்காணிக்க முடியும்.

    பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லைகள் வழியே ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீசி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எல்லைப் பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் பங்கஜ்குமார் சிங் கூறியுள்ளதாவது: 

    ட்ரோன் தடயவியல் ஆய்வுக்காக டெல்லியில் அண்மையில் அதிநவீன ஆய்வகத்தை எல்லை பாதுகாப்பு படை நிறுவி உள்ளது. அதன் முடிவுகள் எங்களுக்க மிகவும் ஊக்கமளிக்கின்றன. இதன் மூலம் எல்லை தாண்டிய சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளின் முகவரியைக் கூட பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்காணிக்க முடியும்.

    கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியே ஊடுருவிய சுமார் 79 ட்ரோன்களை பி.எஸ்.எஃப். கண்டறிந்தது. ​​​​இது கடந்த ஆண்டு 109 ஆக அதிகரித்தது. நடப்பு ஆண்டில் அது 266 ஆக அதிகரித்துள்ளது.

    பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்த ஆண்டு 215 ட்ரோன்களும், ஜம்முவில் சுமார் 22 ட்ரோன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த பிரச்சினை தீவிரமானது. அவர்கள் (பயங்கரவாதிகள்) ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், போலி ரூபாய் நோட்டுக்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவிற்குள் கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தென்னைக்கு தெளிக்க தண்ணீரில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்ததாக தெரிகிறது.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி அடுத்த மணக்கரை அவரிவிளையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஐயப்பகோபு (வயது 46).

    எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவர் விடுமுறையில் கடந்த 4-ம் தேதி ஊருக்கு வந்திருந்தார். ஐயப்பகோபுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ஐயப்பகோபு போதையில் தென்னைக்கு தெளிக்க தண்ணீரில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்ததாக தெரிகிறது. இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த அவரை மீட்டு நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஐயப்பகோபு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி துர்கா (36) இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்திய எல்லையோரப் பகுதிகள் தொடர்பான முக்கிய ரகசியங்களை பாகிஸ்தான் நாட்டு உளவாளிக்கு அளித்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார். #BSFjawanarrested #sharinginfo #Pakistaniagent
    சண்டிகர்:

    மகாராஷ்டிரா மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேன்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் ரியாசுதீன்.

    இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றும் இவரது நடத்தையில் சில மாதங்களாக ஏற்பட்ட மாறுதல்களை கவனித்த எல்லை பாதுகாப்பு உளவுப்படை அதிகாரிகள் ரியாசுதீனை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    தற்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிவரும் ரியாசுதீன் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் இருக்கும் வேலிகள் மற்றும் இணைப்பு சாலைகளை தனது கைபேசியில் படம் பிடித்து அவற்றை பாகிஸ்தானை சேர்ந்த ஒரு உளவாளி மிர்ஸா பைஸல் என்பவருக்கு ரகசியமாக அனுப்பி வந்துள்ளார்.

    மேலும், இந்திய எல்லை பாதுகாப்பு படை உயரதிகாரிகள் சிலரது கைபேசி எண்களையும் அவர் தெரிவித்துள்ளார். இதை மோப்பம் பிடித்த உளவுப்படை அதிகாரிகள் உரிய ஆதாரங்களை சேகரித்த பின்னர் ரியாசுதீனை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து இரண்டு கைபேசிகள் மற்றும் 7 சிம்கார்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். #BSFjawanarrested #sharinginfo #Pakistaniagent
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் உடனான என்கவுண்டரில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒரு வீரர் படுகாயமடைந்துள்ளார்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், ஒரு வீரர் படுகாயங்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார். #CeaseFireViolation #BSF #SambaSector
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டார் அருகே எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகளை குறிவைத்து இன்று காலை தாக்கியது. துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகளால் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை காவலர் தேவேந்திர குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ×