என் மலர்
நீங்கள் தேடியது "BSF jawans"
- பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது உதம்பூர் படைத்தளம் முக்கிய பங்காற்றியது.
- பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டார்.
ஸ்ரீநகர்:
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள உதம்பூர் மாவட்டத்திற்குச் சென்ற ராஜ்நாத் சிங் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படைவீரர்களைச் சந்தித்தார்.
இந்தப் பயணத்தின்போது ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதியும் உடன் இருந்தார்.
இந்தச் சந்திப்பிற்குப்பின் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், நமது வடக்கு எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதில் உதம்பூர் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சிய அடைகிறேன் என தெரிவித்தார்.
அதன்பின், பாதுகாப்புப் படைவீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது உதம்பூர் படைத்தளம் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Chhattisgarh
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் நக்சலைட்டுகள் பலர் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் பகுதியில் நவீன ரக வெடிகுண்டு மூலம் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். #Chhattisgarh






