என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீரம் நிறுவனத்திடம் இருந்து 1.1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம்
Byமாலை மலர்11 Jan 2021 4:42 PM GMT (Updated: 11 Jan 2021 4:42 PM GMT)
சீரம் நிறுவனத்திடம் இருந்து முதல்கட்டமாக 1 கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தடுப்பூசிகள் இன்று இரவு அல்லது நாளை காலை புனேவில் உள்ள சீரம் நிறுவனத்த்தில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உருவாக்கியுள்ள கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய மருத்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.
இதையடுத்து, நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள ஊழியர்களான போலீசார், பாதுகாப்பு படையினர் என மொத்தம் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டும் பணி 16-ம் தேதி நடைபெற உள்ளதால் அதற்கு முன் தடுப்பூசி வினியோகத்தை துரிதமாக மேற்கொண்டு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி கிடைக்கச்செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையில் சீரம் நிறுவனமும் பங்கேற்றுள்ளது.
இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உருவாக்கியுள்ள கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய மருத்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.
இதையடுத்து, நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள ஊழியர்களான போலீசார், பாதுகாப்பு படையினர் என மொத்தம் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட உள்ளது.
இந்நிலையில், சீரம் நிறுவனத்திடம் இருந்து முதல்கட்டமாக 1 கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தடுப்பு மருந்து ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலையில் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த தடுப்பூசிகள் இன்று இரவு அல்லது நாளை காலை புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருது வெளியேற்றப்பட உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டும் பணி 16-ம் தேதி நடைபெற உள்ளதால் அதற்கு முன் தடுப்பூசி வினியோகத்தை துரிதமாக மேற்கொண்டு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி கிடைக்கச்செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையில் சீரம் நிறுவனமும் பங்கேற்றுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X