என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவில் மாடுவிடும் விழா, சேவல் சண்டைக்கு தடை
Byமாலை மலர்11 Jan 2021 8:51 AM GMT (Updated: 11 Jan 2021 8:51 AM GMT)
ஆந்திராவில் மகர சங்கராந்தி பண்டிகையன்று சேவல் சண்டை, மாடு விடும் விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விதிமீறி செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சித்தூர்:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஆந்திராவில் மகா சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இங்கு ஜல்லிகட்டு, சேவல் சண்டை நடப்பது போல் அங்கும் மாடு விடும் விழா, சேவல் சண்டை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா விதிமுறைகளால் மாடு விடும் விழா, சேவல் சண்டை போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆந்திர மாநிலம் முழுவதும் வருகின்ற 14-ந்தேதி மகர சங்கராந்தி (பொங்கல்) பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் பொதுமக்கள் வீட்டில் பொங்கல் வைத்து கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
மேலும் கிராமங்களில் சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விதிமீறி செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சித்தூர் மாவட்டத்தில் வருகிற 14-ந்தேதி கிராம புறங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் சிறப்பு தாசில்தார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
விதிமீறி சேவல் சண்டை மற்றும் மாடுவிடும் விழா நடத்துவது தெரியவந்தால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஆந்திராவில் மகா சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இங்கு ஜல்லிகட்டு, சேவல் சண்டை நடப்பது போல் அங்கும் மாடு விடும் விழா, சேவல் சண்டை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா விதிமுறைகளால் மாடு விடும் விழா, சேவல் சண்டை போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆந்திர மாநிலம் முழுவதும் வருகின்ற 14-ந்தேதி மகர சங்கராந்தி (பொங்கல்) பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் பொதுமக்கள் வீட்டில் பொங்கல் வைத்து கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
மேலும் கிராமங்களில் சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விதிமீறி செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சித்தூர் மாவட்டத்தில் வருகிற 14-ந்தேதி கிராம புறங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் சிறப்பு தாசில்தார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
விதிமீறி சேவல் சண்டை மற்றும் மாடுவிடும் விழா நடத்துவது தெரியவந்தால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X