என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி மரணம்: 46-வது உயிர்ப்பலி
Byமாலை மலர்2 Jan 2021 7:02 AM GMT (Updated: 2 Jan 2021 7:02 AM GMT)
டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வயது முதிர்ந்த விவசாயிகள் குளிரை தாங்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். எனினும் தொடர்ந்து போராட்டக்களத்திலேயே இருப்பதால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இந்நிலையில், டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலம் என தகவல் வெளியாகி உள்ளது. குளிர் காரணமாக உடல் வெப்ப நிலை மிகவும் குறைந்ததால் அவர் இறந்திருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனை செய்ய மற்ற விவசாயிகள் அனுமதிக்காததால் விரிவான விசாரணை மேற்கொள்ள முடியவில்லை என்றும் காசியாபாத் மருத்துவ அலுவலர் கூறி உள்ளார்.
உயிரிழந்த விவசாயி, உத்தர பிரதேசத்தின் பாக்பாத் மாவட்டத்தைச் சேர்ந்த கல்தான் சிங் (வயது 57) என்பது தெரியவந்துள்ளது.
அரசின் ஈகோவிற்கு மேலும் ஒரு விவசாயியை இழந்திருப்பதாகவும், போராட்டத்தின்போது இதுவரை 46 விவசாயிகள் இறந்திருப்பதாகவும் விவசாயிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஆணவம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X