என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் சடலமாக மீட்பு - பரபரப்பு
Byமாலை மலர்29 Dec 2020 3:00 AM GMT (Updated: 29 Dec 2020 3:00 AM GMT)
கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மே கவுடா சிக்மகளூரு அருகே ரெயில் பாதையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்:
கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகராக செயல்பட்டு வருபவர் தர்மே கவுடா. இவர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்.
இதற்கிடையில், கடந்த 15-ம் தேதி கர்நாடகமேலவை சிறப்புக்கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் பசுவதை தடுப்பு சட்டதை ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்ய முயற்சித்தது.
அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகர் தனது இருக்கைஇல் அமர மறுத்துவிட்டார். இதனால், பாஜக-காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த துணை சபாநாயகரான தர்மே கவுடா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். இதனால், ஆத்திரமடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்மே கவுடாவை சபாநாயகர் இருக்கையில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
கர்நாடக சட்டமேலவையில் நடந்த அடுத்தடுத்த இந்த நிகழ்வுகள் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.
இந்நிலையில், சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மே கவுடா கர்நாடகாவின் சிக்மகளூரு அருகே உள்ள கடூரில் ரெயில் தண்டாவாளத்தில் இன்று உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தர்மே கவுடாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தர்மே கவுடா சடலாமாக மீட்கப்பட்ட நிலையில் அவர் ஒரு கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துள்ளார். அந்த கடிதத்தையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மே கவுடா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை? செய்துள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக சட்டமேலவை துணைசபாநாயகர் தர்மே கவுடா ரெயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X