என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய வகை கொரோனா பரவல் இருந்தாலும் இங்கிலாந்து பிரதமரை வரவேற்க ஆர்வம் - இந்தியா அறிவிப்பு
Byமாலை மலர்25 Dec 2020 2:32 AM GMT (Updated: 25 Dec 2020 3:35 AM GMT)
புதிய வகை கொரோனா பரவல் இருந்தாலும் இங்கிலாந்து பிரதமரை வரவேற்க ஆர்வமாக இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால், இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில், இங்கிலாந்து பிரதமர் வருகை சாத்தியமா? என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:
குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்க விடுத்த அழைப்பை இங்கிலாந்து பிரதமர் ஏற்றுக்கொண்டிருப்பதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப், இந்தியாவுக்கு வந்தபோது உறுதிப்படுத்தினார்.
ஆகவே, இங்கிலாந்து பிரதமரை வரவேற்க ஆவலாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால், இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில், இங்கிலாந்து பிரதமர் வருகை சாத்தியமா? என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:
குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்க விடுத்த அழைப்பை இங்கிலாந்து பிரதமர் ஏற்றுக்கொண்டிருப்பதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப், இந்தியாவுக்கு வந்தபோது உறுதிப்படுத்தினார்.
ஆகவே, இங்கிலாந்து பிரதமரை வரவேற்க ஆவலாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X