search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ராஜஸ்தானில் ஜீப்-லாரி மோதல்: 10 பேர் உயிரிழப்பு

    ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் நிகும்ப் அருகே நேற்று இரவு ஜீப்பும், லாரியும் மோதி விபத்துக்குள்ளாகின. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

    இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து குறித்து தனது கவலையைத் தெரிவித்துள்ள முதல்வர் அசோக் கெலாட், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார். 
    Next Story
    ×