என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் விமான சேவை தொடங்க முடிவு
Byமாலை மலர்10 Dec 2020 9:14 PM GMT (Updated: 10 Dec 2020 9:14 PM GMT)
இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
கொரோனா பரவல் காரணமாக மார்ச் 23-ந் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட சர்வதேச விமான சேவை ரத்து இம்மாதம் 31-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருநாடுகளுக்கும் இடையில் விமான சேவையை தொடங்குவது குறித்து நேபாளத்திற்கு மத்திய அரசு பரிந்துரைத்து இருந்தது. தற்போது விமான சேவையை தொடங்குவதற்கு நேபாள அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
இதன்படி கொரோனா மருத்துவ நெறிமுறைகளை பின்பற்றி முதல் கட்டமாக இருநாட்டு தலைநகரங்களான டெல்லி - காத்மாண்டு இடையே தினசரி ஒரு விமான சேவையை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியில் இருந்து காத்மாண்டுவிற்கு ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தை இயக்குகிறது. இரு நாடுகளுக்கு இடையில் இயக்கப்படும் விமானத்தில் உரிய விசா வைத்திருப்பவர்கள், இருநாட்டு குடிமக்கள், இந்திய குடியுரிமை பெற்றவர்கள், இந்திய வம்சாவளியினர் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மார்ச் 23-ந் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட சர்வதேச விமான சேவை ரத்து இம்மாதம் 31-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருநாடுகளுக்கும் இடையில் விமான சேவையை தொடங்குவது குறித்து நேபாளத்திற்கு மத்திய அரசு பரிந்துரைத்து இருந்தது. தற்போது விமான சேவையை தொடங்குவதற்கு நேபாள அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
இதன்படி கொரோனா மருத்துவ நெறிமுறைகளை பின்பற்றி முதல் கட்டமாக இருநாட்டு தலைநகரங்களான டெல்லி - காத்மாண்டு இடையே தினசரி ஒரு விமான சேவையை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியில் இருந்து காத்மாண்டுவிற்கு ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தை இயக்குகிறது. இரு நாடுகளுக்கு இடையில் இயக்கப்படும் விமானத்தில் உரிய விசா வைத்திருப்பவர்கள், இருநாட்டு குடிமக்கள், இந்திய குடியுரிமை பெற்றவர்கள், இந்திய வம்சாவளியினர் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X