search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோதல் நடந்த பகுதி (கோப்பு படம்)
    X
    மோதல் நடந்த பகுதி (கோப்பு படம்)

    புல்வாமா என்கவுண்டர்- 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது ராணுவம்

    ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வீழ்த்தினர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிகேன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அதிகாலையில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×