என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய பாராளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு தடை இல்லை -சுப்ரீம் கோர்ட்
Byமாலை மலர்7 Dec 2020 10:26 AM GMT (Updated: 7 Dec 2020 10:26 AM GMT)
டெல்லியில் வரும் 10-ம் தேதி புதிய பாராளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோரட் இன்று அனுமதியளித்தது.
புதுடெல்லி:
'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் புதிய பாராளுமன்ற கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடம் இப்போதுள்ள கட்டிடத்தின் அருகே அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கட்டிடம் வட்ட வடிவில் அமைந்துள்ளது. ஆனால் புதிய கட்டிடம் முக்கோண வடிவில் அமைக்கப்படவுள்ளது.
இந்தப் புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் 10-ம் தேதி டெல்லியில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி பங்கேற்று புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
இந்நிலையில் மத்திய அரசின் விஸ்டா திட்டத்துக்கு எதிராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, டெல்லியில் புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கான மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவும் அடிக்கல் நாட்டுவதற்கும் தடை இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால், கட்டுமானங்கள் நடக்கவில்லை என்பதை சொலிசிட்டர் ஜெனரல் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனை ஏற்று, விஸ்டா திட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான முடிவை எடுக்கும் வரை, எந்தவிதமான கட்டுமானத்தையும் இடிக்கமாட்டோம், கட்டுமானம் ஏதும் கட்டப்படாது என்றும் மத்திய அரசு உறுதியளித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X