search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கர்நாடகாவில் இன்று மேலும் 1,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    கர்நாடகாவில் இன்று மேலும் 1,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று கர்நாடகாவில் இன்று மேலும் 1,325 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,91,685 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,846 ஆக உயர்ந்துள்ளது.

    மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,400 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,54,861 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 24,959 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×