என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
Byமாலை மலர்4 Dec 2020 5:20 AM GMT (Updated: 4 Dec 2020 5:20 AM GMT)
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4 சதவீதமாக தொடரும். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 3.35 சதவீதமாக நீடிக்கும். வட்டி விகிதத்தை மாற்றாமல் நீடிக்க, நிதிக்கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக வாக்களித்தனர்.
2021ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.5 சதவீதமாக இருக்கும். வருங்காலங்களில் நகர்ப்புறங்களில் தேவை அதிகரிக்கும், கிராமங்களிலும் தேவை அதிகரித்துள்ளது. மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.1% ஆகவும், நான்காம் காலாண்டுக்கு 0.7% ஆகவும் இருக்கும் என கணித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரெப்போ விகிதம் மாற்றப்படாததால் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காது. இது, பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X