என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளை கோழைகள் என நான் கூறவில்லை: மந்திரி பி.சி.பட்டீல் விளக்கம்
Byமாலை மலர்4 Dec 2020 4:30 AM GMT (Updated: 4 Dec 2020 4:30 AM GMT)
விவசாயிகளை கோழைகள் என்று நான் எப்போதும் கூறியது இல்லை. தற்கொலை போன்ற செயல்கள் கோழைத்தனமானது என்று கூறியதாக மந்திரி பி.சி.பட்டீல் விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு :
விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள் என்று கூறினார். சர்ச்சைக்குரிய அவரது இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தனது கருத்து குறித்து மந்திரி பி.சி.பட்டீல் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளை கோழைகள் என்று நான் எப்போதும் கூறியது இல்லை. தற்கொலை போன்ற செயல்கள் கோழைத்தனமானது என்று கூறினேன். யாராக இருந்தாலும் தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவை எடுக்கக்கூடாது. கஷ்டங்களை எதிர்கொண்டு அதில் இருந்து மீண்டு வர வேண்டும். இருட்டு என்று இருந்தால், வெளிச்சம் நிச்சயம் வரும். கோலார் மாவட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது இல்லை. அவர்கள் மற்ற விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள். முழுமையான விவசாய கொள்கையை விவசாயிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் முன்னேற்றம் அடைய வேண்டும்.
இவ்வாறு பி.சி.பட்டீல் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X