என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குருநானக் ஜெயந்தி... போராட்டக் களத்தில் பிரார்த்தனை செய்த விவசாயிகள்
Byமாலை மலர்30 Nov 2020 7:06 AM GMT (Updated: 30 Nov 2020 7:06 AM GMT)
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கிய மதத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளிலேயே பிரார்த்தனை செய்தனர்.
புதுடெல்லி:
சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக்கின் பிறந்த நாளை சீக்கியர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில் குருநானக் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குருத்வாராக்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான சீக்கிய விவசாயிகள் போராட்டக்களத்தில் இருப்பதால் அவர்களால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளிலேயே பிரார்த்தனை செய்தனர். பிரசாதம் செய்து அதை படையலிட்டு, பின்னர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர்.
திக்ரி எல்லையில் (டெல்லி -அரியானா எல்லை) பிரார்த்தனை செய்த விவசாயிகள், அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் பிரசாதம் கொடுத்து மகிழ்ந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X