search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருநானக் ஜெயந்தி"

    குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கியர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
    வாஷிங்டன்:

    சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக் தேவின் 552-வது பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் குருநானக் ஜெயந்தி நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு குருத்வாராக்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    இந்நிலையில், குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கியர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

    இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குருநானக் தேவ்ஜியின் சமத்துவம், அமைதி மற்றும் சேவை பற்றிய தொலைநோக்கு பார்வை ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே இன்றும் முக்கியமானது.
    அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள சமூகங்களை சீக்கியர்கள் தொடர்ந்து பலப்படுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

    குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பாகிஸ்தானில் உள்ள அவரது பிறந்த இடம் மற்றும் புனித தலங்களை தரிசனம் செய்வதற்காக 3800 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கி உள்ளது. #GuruNanakJayanti #PakistanVisa
    புதுடெல்லி:

    குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அவரது பிறந்த இடமான நங்கானா சாகிப் பகுதி மற்றும் அங்குள்ள சீக்கிய புனித தலங்களுக்கு சென்று சீக்கியர்கள் வழிபடுவது வழக்கம். இந்த பகுதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் அருகே உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவுக்கு சீக்கியர்கள் அங்கு வழிபடுவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் விசா வழங்குகிறது.

    இந்த ஆண்டு குருநானக் ஜெயந்தி இன்று முதல் 30-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நங்கானா சாகிப் பகுதிக்கு சென்று வழிபடுவதற்காக ஏராளமான சீக்கியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 3800க்கும் மேற்பட்டோருக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கி உள்ளது. இதேபோல் உலகின் பிற நாடுகளில் வசிக்கும் சீக்கியர்களுக்கும் பாகிஸ்தான் அரசு விசா வழங்கி உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக அளவில் விசா வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத் கூறுகையில், ‘இந்த ஆண்டு குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 3800க்கும் மேற்பட்ட சீக்கிய பக்தர்களுக்கு விசா அளித்துள்ளோம். நமது சகோதர, சகோதரிகளின் இந்த ஆன்மிகப் பயணம் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றார்.  #GuruNanakJayanti #PakistanVisa

    ×