
கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான சந்தை உலகமெங்கும் சூடுபிடிக்க தயாராக இருக்கிறது.
இந்த தருணத்தில் அமெரிக்காவின் மாடர்னா, பைசர், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை விட இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசிதான் இந்தியாவுக்கு ஏற்றதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசியின் விலை மலிவாக அமைவதும், அதிக வெப்பநிலையில் பாதுகாக்க முடியும் என்பதாலும்தான் விஞ்ஞானிகள் இவ்வாறு கூறி உள்ளனர்.
இந்த தடுப்பூசியின் செயல்திறன் 70.4 சதவீதம் ஆகும்.