search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    மும்பையில் கொரோனா பாதிப்பு 1,000-யை தாண்டியது

    மும்பையில் 2-வது நாளாக பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. தாராவியில் புதிதாக 10 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
    மும்பை:

    மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. சில நாட்கள் 500-க்கும் குறைவாகவே பாதிப்பு இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நகரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென ஆயிரத்தை தாண்டியிருந்தது.

    இந்தநிலையில் நேற்றும் நகரில் 1, 092 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்து 572 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நகரில் மேலும் 17 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் நோய் தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 654 ஆக உயர்ந்து உள்ளது.

    மும்பையில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 509 பேர் (92 சதவீதம் பேர்) வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது நகரில் 9 ஆயிரத்து 325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோல தாராவியில் நேற்று புதிதாக 10 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 640 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது அங்கு 15 பேர் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து இருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×