என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பையில் கொரோனா பாதிப்பு 1,000-யை தாண்டியது
Byமாலை மலர்22 Nov 2020 6:27 AM GMT (Updated: 22 Nov 2020 6:27 AM GMT)
மும்பையில் 2-வது நாளாக பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. தாராவியில் புதிதாக 10 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
மும்பை:
மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. சில நாட்கள் 500-க்கும் குறைவாகவே பாதிப்பு இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நகரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென ஆயிரத்தை தாண்டியிருந்தது.
இந்தநிலையில் நேற்றும் நகரில் 1, 092 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்து 572 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நகரில் மேலும் 17 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் நோய் தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 654 ஆக உயர்ந்து உள்ளது.
மும்பையில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 509 பேர் (92 சதவீதம் பேர்) வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது நகரில் 9 ஆயிரத்து 325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல தாராவியில் நேற்று புதிதாக 10 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 640 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது அங்கு 15 பேர் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து இருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. சில நாட்கள் 500-க்கும் குறைவாகவே பாதிப்பு இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நகரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென ஆயிரத்தை தாண்டியிருந்தது.
இந்தநிலையில் நேற்றும் நகரில் 1, 092 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்து 572 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நகரில் மேலும் 17 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் நோய் தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 654 ஆக உயர்ந்து உள்ளது.
மும்பையில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 509 பேர் (92 சதவீதம் பேர்) வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது நகரில் 9 ஆயிரத்து 325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல தாராவியில் நேற்று புதிதாக 10 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 640 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது அங்கு 15 பேர் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து இருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X