என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடக மேல்-சபையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக முடிவு
Byமாலை மலர்21 Nov 2020 2:17 AM GMT (Updated: 21 Nov 2020 2:17 AM GMT)
கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதாவின் பலத்தை அதிகரிக்கும் விதமாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு :
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு போதிய உறுப்பினர்கள் பலம் இல்லை. இதனால் அரசு கொண்டு வரும் புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதாவின் பலத்தை அதிகரிக்கும் விதமாக ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜனதா ஆட்சி அமைந்த பின்பு முதல்-மந்திரி எடியூரப்பாவை 2 முறை குமாரசாமி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது மேல்-சபையில் கூட்டணி அமைப்பது தொடர்பாக 2 பேரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மேல்-சபை தலைவர் பதவியை பா.ஜனதா வைத்து கொண்டு, துணை தலைவர் பதவியை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் டிசம்பர் 7-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது கர்நாடக மேல்-சபை தலைவராக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் சந்திர ஷெட்டிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அவ்வாறு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில் பா.ஜனதாவுக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆதரவு அளித்தால், மேல்-சபை தலைவரை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு போதிய உறுப்பினர்கள் பலம் இல்லை. இதனால் அரசு கொண்டு வரும் புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதாவின் பலத்தை அதிகரிக்கும் விதமாக ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜனதா ஆட்சி அமைந்த பின்பு முதல்-மந்திரி எடியூரப்பாவை 2 முறை குமாரசாமி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது மேல்-சபையில் கூட்டணி அமைப்பது தொடர்பாக 2 பேரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மேல்-சபை தலைவர் பதவியை பா.ஜனதா வைத்து கொண்டு, துணை தலைவர் பதவியை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் டிசம்பர் 7-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது கர்நாடக மேல்-சபை தலைவராக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் சந்திர ஷெட்டிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அவ்வாறு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில் பா.ஜனதாவுக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆதரவு அளித்தால், மேல்-சபை தலைவரை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X